Monthly Archives: August 2020

Learn periya thirumozhi (பெரிய திருமொழி) – 6th centum

Published by:

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:

Thirunaraiyur, Sugandhagiri or Nachiyar Koil. Thirumangai Alwar composed  100 pasurams on this Kshetram. | Alwar, Fair grounds, Painting

Author – thirumangai AzhwAr (திருமங்கை ஆழ்வார்)

Santhai class schedule, joining details, full audio recordings (classes, simple explanations (speeches) etc) can be seen at http://pillai.koyil.org/index.php/2017/11/learners-series/ .


periya thirumozhi (பெரிய திருமொழி)

Santhai (Learning) classes (ஸந்தை வகுப்புகள்)

Part 1 – 6.1
step 1 of 4
step 2 of 4
step 3 of 4
step 4 of 4
Part 2 – 6.2
step 1 of 4
step 2 of 4
step 3 of 4
step 4 of 4
Part 3 – 6.3
step 1 of 4
step 2 of 4
step 3 of 4
step 4 of 4
Part 4 – 6.4
step 1 of 4
step 2 of 4
step 3 of 4
step 4 of 4
Part 5 – 6.5
step 1 of 4
step 2 of 4
step 3 of 4
step 4 of 4
Part 6 – 6.6
step 1 of 4
step 2 of 4
step 3 of 4
step 4 of 4
Part 7 – 6.7
step 1 of 4
step 2 of 4
step 3 of 4
step 4 of 4
Part 8 – 6.8
step 1 of 4
step 2 of 4
step 3 of 4
step 4 of 4
Part 9 – 6.9
step 1 of 4
step 2 of 4
step 3 of 4
step 4 of 4
Part 10 – 6.10
step 1 of 4
step 2 of 4
step 3 of 4
step 4 of 4

Audio

Meanings

Lectures  (விரிவுரை) in thamizh

6.1 அவதாரிகை மற்றும் பாசுரம் 6.1.1
பாசுரங்கள் 6.1.2 – 6.1.3
பாசுரங்கள் 6.1.4 – 6.1.6
பாசுரங்கள் 6.1.7 – 6.1.10
6.2 அவதாரிகை
பாசுரம் 6.2.1
பாசுரம் 6.2.2
பாசுரம் 6.2.3
பாசுரங்கள் 6.2.4 – 6.2.5
பாசுரங்கள் 6.2.6 – 6.2.7
பாசுரம்
6.2.8

அவதாரிகை 6.3,பாசுரம் 6.3.1
பாசுரம்
6.3.2

பாசுரங்கள் 6.3.3 – 6.3.4
பாசுரம்
6.3.5-6.3.7

பாசுரங்கள் 6.3.8 – 6.3.10
6.4 அவதாரிகை,பாசுரங்கள் 6.4.1 – 6.4.2
பாசுரங்கள் 6.4.3 – 6.4.6
பாசுரங்கள் 6.4.7 – 6.4.10
6.5 அவதாரிகை,6.5.1
பாசுரங்கள் 6.5.2 – 6.5.4
பாசுரங்கள் 6.5.5 – 6.5.7
பாசுரங்கள் 6.5.8-6.5.10
6.6 அவதாரிகை,6.6.1 – 6.6.3
பாசுரங்கள் 6.6.4-6.6.6
பாசுரங்கள் 6.6.7 – 6.6.10
6.7 அவதாரிகை,6.7.1 – 6.7.2
பாசுரங்கள் 6.7.3 – 6.7.5
பாசுரங்கள் 6.7.6- 6.7.7
பாசுரங்கள் 6.7.8 – 6.7.10
6.8 அவதாரிகை,6.8.1 – 6.8.3
பாசுரங்கள் 6.8.4- 6.8.5
பாசுரங்கள் 6.8.6- 6.8.10
6.9 அவதாரிகை, பாசுரம் 6.9.1
பாசுரங்கள் 6.9.2- 6.9.4
பாசுரங்கள் 6.9.5-6.9.8
பாசுரங்கள் 6.9.9- 6.9.10
6.10 அவதாரிகை,6.10.1 – 6.10.3
பாசுரங்கள் 6.10.4- 6.10.7
பாசுரங்கள் 6.10.8 – 6.10.10

Audio

Full Recital

பெரிய திருமொழி ஆறாம் பத்து/periya thirumozhi 6th centum – பாராயணம்/recital

Learn nAchchiyAr thirumozhi (நாச்சியார் திருமொழி)

Published by:

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:ANdAl_srIvilliputhur_pinterest.com_sreedevi_balaji

Author – ANdAL (ஆண்டாள்)

Santhai class schedule, joining details, full audio recordings (classes, simple explanations (speeches) etc) can be seen at http://pillai.koyil.org/index.php/2017/11/learners-series/ .


Santhai (Learning) classes (ஸந்தை வகுப்புகள்)

nAchchiyAr thirumozhi (நாச்சியார் திருமொழி)

santhai

Part 1 –padhigam 1- thaniyan
step 1 of 4
step 2 of 4
step 3 of 4
step 4 of 4
Part 2 – padhigam 2
step 1 of 3
step 2 of 3
step 3 of 3
step 4 of 4
Part 3 – padhigam 3
step 1 of 3
step 2 of 3
step 3 of 3
step 4 of 4
Part 4 – padhigam 4
step 1 of 3
step 2 of 3
step 3 of 3
step 4 of 4
Part 5 – padhigam 5
step 1 of 3
step 2 of 3
step 3 of 3
step 4 of 4
Part 6 – padhigam 6
step 1 of 3
step 2 of 3
step 3 of 3
step 4 of 4
Part 7 – padhigam 7
step 1 of 4

step 2 of 4

Step 3 of 4

step 4 of 4
Part 8 – padhigam 8
step 1 of 4

step 2 of 4

Step 3 of 4

step 4 of 4
Part 9 – padhigam 9
step 1 of 4

step 2 of 4

Step 3 of 4

step 4 of 4
Part 10 – padhigam 10
step 1 of 4

step 2 of 4

step 3 of 4

step 4 of 4

Part 11 – padhigam 11
step 1 of 4

step 2 of 4

step 3 of 4

step 4 of 4

Part 12 – padhigam 12
step 1 of 4

step 2 of 4

step 3 of 4

step 4 of 4

Part 13 – padhigam 13
step 1 of 4

step 2 of 4

step 3 of 4

step 4 of 4

Part 14 – padhigam 14
step 1 of 4

step 2 of 4

step 3 of 4

step 4 of 4

Meanings (thamizh discourses)

முன்னுரை

தனியன்கள்

பாசுரங்கள் 1.1 – 1.3

பாசுரம் 1.4

பாசுரம் 1.5

பாசுரம் 1.6 – 1.10

பதிகம் 2 – அவதாரிகை

பாசுரங்கள் 2.1 – 2.2

பாசுரம் 2.3

பாசுரங்கள் 2.4 – 2.6

பாசுரங்கள் 2.7 – 2.10

பதிகம் 3 அவதாரிகை,3.1

பாசுரங்கள் 3.2 – 3.3

பாசுரங்கள் 3.4 – 3.6

பாசுரங்கள் 3.7 – 3.10

பதிகம் 4 அவதாரிகை,4.1 – 4.3

பாசுரங்கள் 4.4 – 4.5

பாசுரங்கள் 4.6- 4.8

பாசுரங்கள் 4.9 – 4.11

பதிகம் 5 அவதாரிகை,5.1

பாசுரம் 5.2

பாசுரங்கள் 5.3 – 5.5

பாசுரம் 5.6

பாசுரம் 5.7

பாசுரம் 5.8

பாசுரம் 5.9

பாசுரம் 5.10-5.11

பதிகம் 6 அவதாரிகை,6.1

பாசுரம் 6.2-6.3

பாசுரம் 6.4-6.7

பாசுரம் 6.8-6.11

7th padhigam – Introduction

pAsurams 7.1 to 7.3

pAsuram 7.4

pAsuram 7.5

pAsuram 7.6

pAsurams 7.7 to 7.10

8th padhigam – Introduction

pAsuram 8.1

pAsuram 8.2

pAsuram 8.3

pAsuram 8.4

pAsuram 8.5

pAsuram 8.6

pAsurams 8.7 to 8.10

padhigam 9 Intro

pAsuram 9.1

pAsuram 9.2

pAsurams 9.3 and 9.4

pAsurams 9.5 to 9.7

pAsurams 9.8 to 9.10

padhigam 10 – Intro

pAsuram 10.1

pAsuram 10.2

pAsuram 10.3

pAsuram 10.4

pAsurams 10.5 and 10.6

pAsurams 10.7 to 10.9

pAsuram 10.10

padhigam 11 – Intro

pAsuram 11.1

pAsurams 11.2 and 11.3

pAsurams 11.4 and 11.5

pAsuram 11.6

pAsurams 11.7 and 11.8

pAsurams 11.9 and 11.10

padhigam 12 Intro

pAsuram 12.1

pAsuram 12.2

pAsuram 12.3

pAsuram 12.4

pAsuram 12.5

pAsuram 12.6

pAsurams 12.7 and 12.8

pAsurams 12.9 and 12.10

padhigam 13 Intro

pAsuram 13.1

pAsuram 13.2

pAsuram 13.3

pAsurams 13.4 and 13.5

pAsurams 13.6 and 13.7

pAsurams 13.8 to 13.10

padhigam 14 Intro

pAsurams 14.1 and 14.2

pAsurams 14.3 to 14.5

pAsurams 14.6 and 14.7

pAsurams 14.8 to 14.10

Posters – gIthA – Chapter 2 – English

Published by:

ஸ்ரீராமாயணம் பாலபாடம் – மாண்டாள் தாடகை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< மாமுனிவர்களைத் துன்புறுத்தும் தாடகை

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி தன் அகத்து எம்பெருமான் சந்நிதி முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். குழந்தைகள் வருவதைப் பார்த்ததும் , வாருங்கள் குழந்தைகளே, கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருக்கண்ணமுதைத் தருகிறேன்.

குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த திருக்கண்ணமுதைப் பருகினார்கள்.

வேதவல்லி: ராமன் விச்வாமித்ர முனிவரின் அறிவுரையின்படி தாடகையைக் கொன்றானா? ஆயிரம் யானைகளுடைய பலத்தை அக்கொடிய அரக்கி எவ்வாறு பெற்றாள்?

பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். முன்னொருகால் சுகேது என்ற யக்ஷனொருவன், ப்ரஹ்மன் கொடுத்த வரத்தால் ஆயிரம் யானைகளைப் போல வலிமையுடைய தாடகையை மகளாகப் பெற்றான். அவளை சுந்தன் என்னும் ராக்ஷசனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். சுந்தனுக்கும் தாடகைக்கும் மாரீசன், சுபாஹு என்ற புதல்வர்கள் பிறந்தார்கள். அகஸ்திய முனிவரிடம் அபச்சாரப்பட்டதால் தாடகையின் பிள்ளைகள் ராக்ஷசர்களானார்கள். தாடகை தன்னுடைய அழகிய உருவத்தை இழந்து பார்க்க வழங்காதபடி கோரமான முகத்துடன்கூடி மனிதர்களைப் பிடுங்கித் தின்னும் ராக்ஷசியாக ஆகிவிட்டாள். சாபத்தைப் பெற்ற தாடகை, உலகனைத்தும் வருந்தும்படி கொடூர செயல்களைச் செய்து கொண்டிருந்தாள். முனிவர்கள் உலக நன்மையின் பொருட்டு யாகங்கள் செய்யும்பொழுது, அவர்களைத் துன்புறுத்தி யாக வேள்வியில் ரத்த மாமிசங்களை மழையாகப் பொழிகின்றாள். கொடிய தாடகையின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் எல்லை மீறுகின்றது. அழகிய தேசங்கள் பாழடைந்தன. இவளை வதம் செய்வது மிக உத்தமமான செயல். சிறிதும் தயங்காமல் அவளை முடித்துவிடு என்றார் விச்வாமித்ர முனிவர். ஆனால் ராமனோ கருணையே வடிவெடுத்தவன். ஒரு பெண்ணை வதைக்க அவன் மனம் சம்மதிக்கவில்லை.

பராசரன்: ஆனால் அவளோ பெண் உருவெடுத்த ராக்ஷசி ஆயிற்றே. தாமதித்தால் உலகமழிந்திடுமே. என்ன நடந்தது பாட்டி, மேலும் சொல்லுங்கள்.

பாட்டி: விச்வாமித்ர முனிவர், ராமனிடம் அக்கொடிய தாடகையை அழித்தே ஆகவேண்டும். ராஜ குமாரனான நீ, உலக மக்களின் நன்மைக்காக இச்செயல் புரியவேண்டும். அதுவே ராஜ தர்மம். பெண்களாயினும் கொடியவர்கள் என்றால் அவர்களை அழிப்பது தவறல்ல. அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவாயாக என்றார்.

அத்துழாய்: ராமன் தர்மமே வடிவெடுத்தவன். நிச்சயமாக முனிவர் விருப்பத்தை நிறைவேற்றியிருப்பான்.

பாட்டி: ராமன் விச்வாமித்ர முனிவரின் வார்த்தையை சிரமேற்கொண்டு நடப்பதாக வாக்களித்து, உடனே தன்னுடைய வில்லில் நாணையேற்றி ஒலியெழுப்பினான். அந்த நாணின் ஒலியைக்கேட்டு, தாடகையின் காட்டில் வசிக்கும் அனைவரும் அஞ்சிநடுங்கினர். தாடகையும் அவ்வொலியைக் கேட்டு மிகுந்த கோபம்கொண்டு, ஒன்றும் செய்வதறியாமல் தட்டித் தடுமாறி, அவ்வொலியானது எந்த திசையிலிருந்து வருகிறதென்று அறிந்து வேகமாக ஓடி வந்தாள். அவள் ஓடிவருவதைக் கண்ட ராமன் தன் தம்பி லக்ஷ்மணனைப் பார்த்து, லக்ஷ்மணா இக்கொடிய தாடகையின் வடிவத்தைப்பார். இவள் யாராலும் வெல்லமுடியாதவள். மேலும் இவள் அதீத பலம் பொருந்தியவள். இப்பொழுது இவளுடைய காதையும் மூக்கின் நுனியையும் அறுத்துத் துரத்திவிடு என்றான். இதனால் விச்வாமித்ர முனிவரின் கட்டளையை நிறைவேற்றியதாகிவிடும். இவள் ஒரு பெண்னாக இருப்பதால் என் மனம் இவளைக் கொள்ள மறுக்கின்றது. ஆகையால் கைகளையும் கால்களையும் முறித்து விட்டுவிடலாமென்று எனக்குத் தோன்றுகிறது என்றான். இப்படி ராமன் சொல்லிக்கொண்டிருக்கையில், அக்கொடிய தாடகை கைகளை உயர்த்திக்கொண்டு, கர்ஜித்துக்கொண்டே ராமனை நோக்கி ஓடிவந்தாள். அதைக் கண்ட விச்வாமித்ர முனிவர், ராமன் அதீத பலம் பொருந்தியவன் என்று நன்கு அறிந்தும், அவனுக்குத் தாடகையால் எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருக்கவேண்டும். அவனுக்கு எப்பொழுதும் வெற்றி உண்டாகட்டும் என்று மங்களாசாசனம் செய்தார்.

வ்யாசன்: ராமன் ஸாக்ஷாத் ஸர்வேஶ்வரன் என்று அறிந்திருந்தாலும், அவனுடைய மென்மையான திருமேனியானது இவ்வாறு விச்வாமித்ர முனிவரை மங்களாசாசனம் பண்ணும்படி செய்தது.

பாட்டி: மிகச்சரியாக சொன்னாய். அக்கொடிய அரக்கி எங்கும் புழுதியை வாரி இறைத்துத் தான் நினைத்தபடி கோரமான வடிவங்களை எடுத்துக்கொண்டு, அளவில்லாத கற்களைப் பொழிந்தாள். ராமனும் மிகவும் கோபம் கொண்டு, அவள் பொழிந்த கற்களைத் தடுத்து அவற்றை பொடிப்பொடியாக்கி, அவளது கைகளை அறுத்தெறிந்தான். விச்வாமித்ர முனிவர் ராமனிடம், இக்கொடியவள் மீது நீ இனியும் கருணை காட்டவேண்டாம். அந்திப்பொழுது நெருங்குகிறது. அந்திப்பொழுதில் ராக்ஷஸர்கள் யாவராலும் வெல்லமுடியாத அதீத பலத்தைப் பெறுவார்கள். அப்பொழுது அவர்களை வெல்வது மிகக்கடினம். ஆதலால் காலம் தாழ்த்தாது இப்பொழுதே அவளை வதைத்தெறிவாயாக என்றார். கண்ணுக்குப் புலப்படாமல் கற்களைப் பொழியும் தாடகையின் முழக்கத்தினால் அவள் இருக்கும் திசையறிந்து, ராமன் தன்னுடைய அம்புகளால் எங்கும் போகவிடாமல் அவ்விடத்திலேயே அவளைத் தடுத்துவிட்டான். அவளும் ராம பாணங்களால் கட்டுப்பட்டு செய்வதறியாமல் அலறிக்கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் மார்பில் ஓர் அம்பைத் தொடுத்து நாட்ட, அந்த நொடியே அக்கொடியவள் மாண்டு போனாள்.

வேதவல்லி: மாண்டாள் தாடகை. ஜெயித்தான் ராமபிரான். அதர்மம் ஓங்கும்பொழுது எம்பெருமான் அவற்றை ஒழித்து, தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்துவான் என்பது நன்கு புலப்படுகின்றது. விச்வாமித்திர முனிவர் பேரானந்தம் அடைந்திருப்பாரே பாட்டி?!

பாட்டி: அவர் மட்டுமா ஆனந்தமடைந்தார், மூவுலகும் களிப்படைந்தது. தாடகை மடிந்த செய்தியறிந்து மகிழ்ச்சியடைந்த இந்திரன், தேவர்களோடு அவ்விடத்தில் தோன்றி, விச்வாமித்ர முனிவரிடம், நீர் ராமனிடத்தில் கொண்டுள்ள அதீத ப்ரியத்தை இப்பொழுது வெளியிடவேண்டும். நீர் தவ மகிமையால் பெற்ற அஸ்திர வித்தைகளை, ராமனுக்குக் கற்பிக்கவேண்டும் என்று சொல்லி முனிவரைப் பூஜித்துப் போனான்.

வ்யாசன்: தாடகை வதம் ஆயிற்று. மிகவும் அழகாகச் சொன்னீர்கள் பாட்டி. மேலும் சொல்லுங்கள். கேட்பதற்கு ஆவலாக இருக்கிறது.

பாட்டி: வந்தெதிர்ந்த தாடகை தன் உரத்தைக்கீறிய ராமனுக்குப் பல்லாண்டு. அடுத்தடுத்த விஷயங்களை நாளை உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள்.

குழந்தைகள் பாட்டி சொன்ன கதையை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Posters – upadhEsa raththina mAlai

Published by:

ஸ்ரீராமாயணம் பாலபாடம் – மாமுனிவர்களைத் துன்புறுத்தும் தாடகை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< ஸரயூ நதிக்கரையில் மந்திர உபதேசம்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. உங்கள் வருகைக்காகக் காத்திருந்தேன். கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருப்பணியாரங்களைத் தருகிறேன்.

குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த திருப்பணியாரங்களை உண்டார்கள்.

பராசரன்: பாட்டி, சென்ற வாரம் ராமபிரான் விச்வாமித்ர முனிவரிடமிருந்து பலை அதிபலை என்ற மந்திரங்களை உபதேசமாகப் பெற்று, குருவிற்கு செய்யவேண்டிய உபசாரங்கள் அனைத்தையும் நன்கு செய்து, அன்றிரவுப் பொழுதை ஸரயூ நதிக்கரையிலே மூவரும் கழித்தனர் என்று சொல்லி முடித்தீர்கள் பாட்டி.

பாட்டி: நன்கு நினைவுறுத்தினாய் பராசரா. மேலும் கதையைச் சொல்கிறேன், கேளுங்கள் குழந்தைகளே. அன்றிரவுப் பொழுது அம்மூவருக்கும் ஸரயூ நதிக்கரையில் நன்கு கழிந்தது. பொழுது விடிந்ததும், ராஜ குமாரர்களான ராம லக்ஷ்மணர்களை விச்வாமித்ர முனிவர் பள்ளி உணர்த்தினார் (துயில் எழுப்பினார்). ராமன் அழகாக உறங்கிக்கொண்டிருந்தான் . ”கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்” என்று விச்வாமித்ர முனிவர் ஸ்தோத்திரம் செய்து ராமனை எழுப்புகிறார். கௌசலையின் தவப்புதல்வனே ! ராமா! சூரியன் கிழக்கே உதித்தது, பொழுது விடிந்தது, உறக்கத்திலிருந்து எழுந்து உம்முடைய நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்வாயாக என்கிறார். ராம லக்ஷ்மணர்கள் கண் விழித்தனர். தம்முடைய நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து முடித்து, அவ்விடத்திலிருந்து விச்வாமித்ர முனிவர் புறப்படுவதை எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர்.

வேதவல்லி: ஸரயூ நதிக்கரையிலிருந்து அம்மூவரும் எங்கு புறப்பட்டார்கள் பாட்டி?

பாட்டி: மூவரும் ஸரயூநதி வந்து சேருமிடத்தில் புண்ய நதியான கங்காநதியைக் கண்டனர். அங்கு அமைந்திருக்கும் ரிஷிகளின் ஆசிரமங்களைக் கண்டு தசரதனின் புத்திரனான தாசரதி, விச்வாமித்ர முனிவரிடம் இந்த அழகிய பர்ணசாலைகள் யாருடையது? இங்கு குடியிருப்பவர்கள் யாரென்று கேட்டான்.

அத்துழாய்: பர்ணசாலை என்றால் என்ன பாட்டி?

பாட்டி: காட்டில் கிடைக்கக்கூடிய உலர்ந்த இலைகள், மரக்கழிகள் மற்றத் தாவரப்பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் குடில்கள். முனிவர்களும், யோகிகளும் காடுகளில் வாழும்போது தாங்கள் தங்குவதற்காக அமைத்துக்கொள்வது தான் பர்ணசாலை என்பது. மேலும் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள். விச்வாமித்ர முனிவர் ராம லக்ஷ்மணர்களிடம், குழந்தைகளே, காமனென்னும் மன்மதன் முன்பு கண்ணுக்குப் புலப்படும்படியாக உருவத்துடன் இருந்தான். பின்பொரு சாபத்தால் தன்னுடைய அங்கங்களை இழந்து அனங்கனென்று பெயர்பெற்றான். அந்த மன்மதன் தன்னுடைய உடல் அங்கங்களை எவ்விடத்தில் இழந்தானோ, அந்த தேசம் இன்றும் அங்கதேசம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கிருக்கும் இம்முனிவர்கள், அக்காலம் தொடங்கி வம்ச பரம்பரையாக இவ்விடத்தில் வாழ்ந்து வருகின்றனர். இன்று இரவு இந்த அங்கதேசத்தில் இப்புண்யநதிகளின் இடையில் தங்கியிருந்து நாளைய தினம் நாம் கங்கைநதியைத் தாண்டி ப்ரயாணத்தைத் தொடரலாம் என்றார்.

வ்யாசன்: விச்வாமித்ரமுனிவர், ராம லக்ஷ்மணர்களின் வருகையைக் கண்டு அம்முனிவர்கள் யாவரும் மிகவும் மகிழ்ந்திருப்பார்களே பாட்டி?

பாட்டி: ஆம் மிகவும் மகிழ்ந்து அவர்களுக்கு அதிதி பூஜையை நன்கு நடத்தினர். பின்னர் அவர்களெல்லோரும் பற்பல புண்ய கதைகளைச் சொல்லிக்கொண்டே அன்றிரவுப் பொழுதைக் கழித்தார்கள்.

வேதவல்லி: இதிலிருந்து நம் அகத்திற்கு வரும் விருந்தினர்களை நன்கு உபசரிக்கவேண்டும் என்று விளங்குகிறது. மேலும் சொல்லுங்கள் பாட்டி. கேட்பதற்கு ஆவலாக இருக்கிறது.

பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். பொழுது விடிந்தது. ராம லக்ஷ்மணர்கள் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து முடித்தனர். பின்பு மூவரும் கங்கை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கிருக்கும் முனிவர்கள் அனைவரும், ஒரு ஓடத்தை அருகில் கொண்டு வந்து நிறுத்த, அம்மூவரும் அதிலேறி ஸரயூ நதியின் பெருமைகளைப் பேசிக்கொண்டே கங்கை நதியின் தென்கரையை அடைந்து, இறங்கி வேகமாக நடந்தார்கள். மக்கள் நடமாட்டமில்லாத கொடிய விலங்குகள் நிறைந்த இக்கானகத்தின் (காட்டின்) பெயர் யாது? என்று ராம லக்ஷ்மணர்கள் விச்வாமித்ர முனிவரைக் கேட்டனர். அதற்கு விச்வாமித்ர முனிவர், முன்பு இது தேவர்களால் நிருமிக்கப்பட்டு நன்கு செழிப்போடு மலதமென்னும், கரூசமென்னும் பெயர்களைக் கொண்ட இரண்டு தேசங்களாக இருந்தது. சில காலங்களுக்குப் பின் தாடகை என்னும் பெயர் கொண்ட ஒரு யக்ஷ கன்னிகை தோன்றினாள். அவள் பிறந்தது முதல் ஆயிரம் யானைகளுடைய பலத்தைப் பெற்று நினைத்தபடி வடிவமெடுக்கும் வல்லமை பெற்றிருந்தாள். அவளை சுந்தன் என்பவன் திருமணம் செய்துகொண்டான். அவளுக்கு மாரீசன், சுபாஹு என்ற இரு ராக்ஷஸர்கள் பிறந்தார்கள். இருவரும் தன் தாயைப் போலக் கொடூரர்களாக இருந்தார்கள். அத்தாடகை இந்த மலத கரூச தேசங்களைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறாள். ஒன்றரை யோசனை தூரத்தில் வழியை அடைத்துக்கொண்டு வசிக்கிறாள். அக்கொடிய அரக்கியான தாடகை வசிக்கும் காட்டைத் தாண்டியே நாம் போகவேண்டும். என்னுடைய சொல்படி அக்கொடிய அரக்கியை நீ வதம் செய்யவேண்டும். அவளை நீ வதம் செய்துவிட்டால் மீண்டும் இவ்விரு தேசங்களும் செழிப்படையும். அவளுடைய ஆக்கிரமிப்பால் இவ்விடம் மக்கள் நடமாட்டமில்லாது இருக்கின்றன என்றார்.

பராசரன்: கேட்பதற்கே பயங்கரமாக இருக்கிறது பாட்டி. மிகவும் மென்மையான ராமன், இக்கொடிய அரக்கியை எவ்வாறு வதம் செய்தான்? மீண்டும் அவ்விரு தேசங்களும் இழந்த பொலிவையும் செழிப்பையும் பெற்றதா? மேலும் சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி: குலசேகர ஆழ்வார் தான் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில், “வந்தெதிர்ந்த தாடகை தன் உரத்தைக்கீறி வருகுருதி பொழிதர வன்கணையொன்றேவி” என்று தாடகை வதத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அடுத்தமுறை நீங்கள் வரும்பொழுது தாடகை வதத்தைப்பற்றிச் சொல்கிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள்.

குழந்தைகள் பாட்டி சொன்ன கதையை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Posters – உபதேச ரத்தின மாலை

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திவ்ய ப்ரபந்தாம்ருதம் – தமிழ்

Thanks to Smt Hemalatha Narasimhan for preparing the posters.

ஸ்ரீராமாயணம் பாலபாடம் – ஸரயூ நதிக்கரையில் மந்திர உபதேசம்

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

<< கொடுத்த வாக்கை நிறைவேற்றிய தசரதன்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன்.

குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த பழங்களை உண்டார்கள்.

அத்துழாய்: பாட்டி, சென்ற வாரம் தசரத மன்னன் ஸ்ரீராமனை விசுவாமித்ர முனிவருடன் காட்டிற்கு அனுப்ப ஒப்புக்கொண்டார் என்று சொல்லி முடித்தீர்கள். மேலும் சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி: சொல்கிறேன் குழந்தைகளே கேளுங்கள். மன்னன் ஸ்ரீராமனையும், லக்ஷ்மணனையும் அழைத்து நல்லாசி வழங்கி முனிவருடன் அனுப்பிவைத்தார். ராமபிரான் முனிவருடன் புறப்படும்பொழுது, தேவர்கள் துந்துபி வாத்தியங்கள் முழங்கி பூமழை பொழிந்தனர். விச்வாமித்ர முனிவர் முன்னே நடந்தார். அவர் பின்னே வில்லும் கையுமாக ஸ்ரீ ராமன் தொடர்ந்தான். லக்ஷ்மணனும் வில் ஏந்தி ராமபிரானை பின் தொடர்ந்தான். பின்பு அம்மூவரும் ஒன்றரை யோஜனை தூரம் கடந்து ஸரயூ நதியின் தென்கரையை அடைந்தார்கள்.

வ்யாசன்: ராஜகுமாரர்களாக ராஜ போகத்துடன் வாழ்ந்து பழகிய ராம லக்ஷ்மணர்கள் எவ்வாறு இவ்வளவு தூரம் நடந்து சென்றார்கள் பாட்டி ?

பாட்டி: ராஜாதி ராஜனான எம்பெருமான் தன்னுடைய போக ஸ்தானமான ஸ்ரீவைகுண்டத்தை விட்டு இப்பூவுலகில் சாமான்ய ராஜனுக்கு மகனாக அவதரித்தவன். அறப்பெரியவன் தன்னுடைய உயர்நிலையைப் பொருட்படுத்தாமல் தன்னைத் தாழ்த்திக்கொண்டு அவதரித்தது மட்டுமில்லாமல், தன் போகங்களை ஒதுக்கிவிட்டு தேவர்களுடைய துன்பம் களைவதற்காக, ராமாவதாரத்தில் மேற்கொண்ட முதல் பயணம் இது.

பராசரன்: ராமனுடைய எளிமையான குணம் நன்கு வெளிப்படுகின்றது பாட்டி. மேலும் லக்ஷ்மணன் ராமனுக்குச் செய்யும் தொண்டாகிற செல்வத்தைப் பெருக்குவதிலே ஆர்வம் காட்டியிருப்பது அழகாக வெளிப்படுகின்றது.

பாட்டி : ஆம் மிகச் சரியாக சொன்னாய் பராசரா. ராமனுக்கு நிழல் போல லக்ஷ்மணன் திகழ்ந்தான். ராமனை விட்டு ஒரு நொடிப்பொழுதும் லக்ஷ்மணன் பிரிந்திருக்கமாட்டான். அதனால் இருவருமே முனிவருடைய யாகத்தைக் காப்பதற்காகப் பயணம் மேற்கொண்டனர்.

வேதவல்லி: ஸரயூ நதியின் தென்கரையில் சிறிது நேரம் இளைப்பாறினார்களா பாட்டி ? மேலும் சொல்லுங்கள்.

பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். விசுவாமித்ர முனிவர் ராமா என்று இனிமையாக அழைத்து, குழந்தையே ஜலத்தை எடுத்து ஆசமனம் செய்; மிகவும் சக்தி வாய்ந்த பல மந்திரங்களைக் கொண்ட பலை என்றும் அதிபலை என்றும் இரண்டு மந்திரங்களை உனக்கு உபதேசிக்கிறேன். அவ்விரு மந்திரங்களையும் நீ ஜபித்திக்கொண்டிருந்தால் தோள் வலிமையில் உனக்கு நிகர் வேறொருவனும் அகப்படமாட்டான். உடல் மற்றும் மனம் வலிமை அடையும். இம்மந்திரத்தைப் பெறத் தகுதியானவனாக நீயே இருக்கிறாய். இம்மந்திரத்தை நீ உபதேசம் பெறுவதனால் உனக்கு வெகு பலன்களைக் கொடுக்கும். நீயும் இந்த உயர்ந்த இரண்டு மந்திரத்தை உலகில் தகுதியுள்ளவர்களுக்கு உபதேசித்து பரவச்செய்வாய் என்று கூறினார்.

அத்துழாய்: சகல சாஸ்திரத்திற்கும், மந்திரத்திற்கும் ஆதாரமான எம்பெருமான் தன்னுடைய க்ருஷ்ணாவதாரத்தில், எவ்வாறு சாந்தீபனி முனிவரிடம் 64 கலைகளை 64 நாட்களில் கற்றாரோ, அதுபோல இருக்கிறது பாட்டி, எம்பெருமான் தன்னுடைய ராமாவதாரத்தில் ஏதுமறியாத குழந்தை போல இம்முனிவரிடம் மந்திரங்களைப் பெறுவது.

பாட்டி: மிக அழகாக உவமானம் சொன்னாய் அத்துழாய். மேலும் சொல்கிறேன் கேளுங்கள். ஸ்ரீராமன், முனிவரின் வார்த்தைகளைக் கேட்டு, ஆசமனம் செய்து பரிசுத்தனாகி அவ்விரு மந்திரத்தையும் அவரிடமிருந்து உபதேசமாகப் பெற்றான். விச்வாமித்ர முனிவர் ராமனின் சிரத்தையைக் கண்டு ஆனந்தமடைந்தார். ராமபிரானும் தனக்கு மந்திரத்தை உபதேசித்த விச்வாமித்ர முனிவருக்கு க்ருதக்ஞதையோடு (நன்றி உணர்வோடு) குருவிற்குச் செய்யவேண்டிய உபசாரங்கள் அனைத்தையும் நன்கு செய்தான். அம்மூவரும் அன்றிரவுப் பொழுது ஸரயூ நதிக்கரையில் ஆனந்தமாக கழித்தார்கள்.

வேதவல்லி: ராமபிரான் தன்னுடைய குருவிடம் பணிவாக நன்றியுணர்வோடு இருப்பது கேட்டு, நாங்களும் அவன் அருளால் இக்குணங்களைப் பெற வேண்டுகிறோம் பாட்டி. எல்லா நற்குணங்களுக்கும் ராமன் ஒருவனே சிறந்த உதாரணமாக திகழ்ந்திருக்கிறான் பாட்டி. நீங்கள் மிக அழகாக எங்களுக்கு ராம சரித்திரத்தை எடுத்துரைக்கிறீர்கள். மேலும் சொல்லுங்கள் கேட்க ஆவலாக இருக்கிறது.

பாட்டி: இப்பொழுது இருட்டிவிட்டது. உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள். அடுத்தமுறை வரும்பொழுது மேலும் சொல்கிறேன்.

குழந்தைகள் பாட்டி கூறியதை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.

அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாஸி

வலைத்தளம் –  http://pillai.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Posters – rAmAnusa nURRandhAdhi

Published by: