ஸ்ரீராமாயணம் பாலபாடம் – விசுவாமித்ர முனிவரின் வருகை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << திருவவதாரம் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி தன் அகத்து எம்பெருமானுக்காக புஷ்பம் கட்டிக்கொண்டிருந்தாள். வாருங்கள் குழந்தைகளே! கை கால்களை அலம்பிக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருப்பணியாரங்களைத் தருகிறேன். பராசரன்: சென்ற முறை ராம ஜனனம் பற்றிக் கூறினீர்கள் பாட்டி. மேலும் ராம கதையைக் கேட்க ஆசையாக இருக்கிறது. … Read more