ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.
பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன். இந்த மாதத்தின் சிறப்பு என்னவென்று தெரியுமா?
பராசரன் : நான் சொல்கிறேன் பாட்டி. நீங்கள் எங்களுக்கு சொல்லியது நினைவிருக்கிறது. மணவாள மாமுனிகள் அவதரித்த மாதம் இது. ஐப்பசி மாதம் மூலம் திருநக்ஷத்திரம் .
வேதவல்லி : ஆமாம். மேலும் முதலாழ்வார்கள் , சேனை முதலியார் மற்றும் பிள்ளை உலகாசிரியரும் இதே மாதத்தில் தான் அவதரித்தார்கள். சரியா பாட்டி?
- நம்மை மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்குச் சமம் என்று எண்ணக்கூடாது. மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களைக் காட்டிலும் நம்மைத் தாழ்ந்தவர்கள் என்று நினைவில் கொள்ளவேண்டும்.
- எவரையும் நம் மனதினாலோ, வாக்கினாலோ, செயல்களினாலோ புண்படுத்தக்கூடாது.
- ஸ்ரீவைஷ்ணவர்கள் எவரையும் அவர்கள் பிறப்பு, அறிவு, வாழ்க்கை முறை, செல்வம், தோற்றம் இவற்றை வைத்து அவமதிக்கக்கூடாது. இது இருபாலினத்தவர்களுக்கும் பொருந்தும்.