பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.
பாட்டி தன் அகத்து எம்பெருமானுக்கு சமர்ப்பிப்பதற்காக மாலைக் கட்டிக்கொண்டிருந்தாள். வாருங்கள் குழந்தைகளே கை கால்களை அலம்பிக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் (பால்) கொண்டு வருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள்.
பாட்டி : நாம் ஸ்ரீராமாயணத்தில் எந்த கட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைவிருக்கிறதா?
அத்துழாய்: நன்கு நினைவிருக்கிறது பாட்டி. தசரத மன்னன் தன் அரசவையில் ஆலோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் விசுவாமித்ர முனிவர் அங்கு வந்து மன்னனிடம் எதையோ வேண்டிப் பெறுவதற்காக வந்தார் என்று சொன்னீர்கள்.
பாட்டி : சரியாகச் சொன்னாய் அத்துழாய்.
வ்யாசன்: எதைப் பெறுவதற்காக வந்தார்? தசரத மன்னன் முனிவர் வேண்டியதைக் கொடுத்தாரா? சொல்லுங்கள் பாட்டி. கேட்க ஆவலாக இருக்கிறது.
பாட்டி : சொல்கிறேன் கேளுங்கள். விசுவாமித்திர முனிவர் அகமகிழ்ந்து தசரத மன்னனை நோக்கி, ஓ தரணியாளனே! உயர்ந்த சூரிய குலத்தில் பிறந்து இக்ஷ்வாகு குலத்திற்கு பெருமை சேர்த்து, வசிஷ்டரின் இன்னருளைப் பெரும் பாக்யம் உன்னைப் போன்றவனுக்கே தகும். நான் உன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லப்போகிறேன். அதை நீ செய்ய ஒப்புக்கொள்ளவேண்டும். நீ சொன்ன சொல் தவறக்கூடாது. இவ்வுலக நன்மையின் பொருட்டு நான் யாகம் செய்யத்தொடங்கி தீக்ஷையிலிருக்கிறேன். அதற்கு ராக்ஷஸர்கள் மிகவும் இடையூறு விளைவிக்கின்றனர். எனது விரதத்தைக் கெடுப்பதற்காக மாரீசன், ஸுபாஹு என்ற ராக்ஷஸர்கள் இருவரும் யாகவேதிக்கு நாற்புறத்திலும் மாம்ஸங்களையும், ரத்த வெள்ளத்தையும் பொழிகின்றனர். அதனால் மிகவும் வருத்தமடைந்து அவ்விடத்தை விட்டு வந்துவிட்டேன். என் சாபத்தால் அவர்களை அழித்திருக்க முடியும். ஆனால் யாகம் செய்யும் தருணத்தில் கோபம் கொள்ளக்கூடாது என்பதை நீயும் அறிவாய். அதனால் என் யாகத்தை காப்பதற்கு உன் மூத்த மகன் ராமனை என்னுடன் நீ இப்பொழுது அவசியம் அனுப்பவேண்டும் என்றார்.
வேதவல்லி: ராமனை எவ்வாறு தசரதன் கொடுப்பார்? இதைக்கேட்டு அவர் மனம் கலங்கியிருக்குமே, என்ன நடந்தது பாட்டி?
பாட்டி: இதைக்கேட்ட மன்னன் கலங்கி மிகவும் வருந்தினான். ஆனால் விசுவாமித்திர முனிவர் தசரத மன்னனிடம், ராமன் சிறு பிள்ளையாக இருக்கிறான், அவன் எவ்வாறு ராக்ஷஸர்களை அழிக்கமுடியும் என்று எண்ணாதே. அவன் மிகவும் பராக்கிரமம் கொண்டவன். அவனையொழிய மற்றெவராலும் அந்த ராக்ஷஸர்களை வெல்லமுடியாது. மேலும் நான் ராமனுக்கு பலவகை நன்மைகளையும் செய்வேன். ராமனுடைய பராக்கிரமத்தைப் பற்றி நான் அறிவேன். நான் மட்டுமில்லை வசிஷ்ட முனிவரும் நன்கு அறிவார். தவத்தில் நிலைநின்ற மற்றுமுள்ள இம்முனிவர்கள் எல்லோரும் அறிவார்கள். இப்பூவுலகில் தர்மம் தழைத்தோங்கி நிற்கவேண்டுமென்று நீ விரும்பினால், ராமனை என்னுடன் அனுப்பிவைக்க வேண்டும். அவனுடைய உதவி எனக்கு பத்து நாட்கள் வரையிலுமே வேண்டும். அதனால் உனக்கு மிகுந்த நன்மையும், புகழும் உண்டாகும். சிறிதும் யோசிக்காமல் இப்பொழுது ராமனை என்னுடன் அனுப்பிவைக்கவேண்டும் என்றார். மன்னன் இதைக்கேட்டு தான் அமர்ந்த சிம்ஹாசனத்திலிருந்து நடுங்கி விழுந்து மூர்ச்சித்தான்.
பராசரன்: பிறகு என்ன நடந்தது பாட்டி? மன்னனுக்கு என்ன நேர்ந்தது? ராமனை விசுவாமித்திர முனிவர் அழைத்துச் சென்றாரா ?
பாட்டி : சில நேரம் கழிந்தபின் தெளிந்த மன்னன், விச்வாமித்ர முனிவரே! சிவந்த தாமரைப் போன்ற அழகிய திருக்கண்களையுடைய ராமன் மிகவும் மென்மையானவன். மேலும் யுத்தம் செய்வதற்குத் தகுந்த வயதும் நிரம்பவில்லை. என்னைவிட்டு அகலாத இச்சிறுபிள்ளை எவ்வாறு யுத்தம் செய்ய இயலும்? இவ்வயதில் விளையாடிக் கொண்டிருக்கவேண்டிய இவன், யுத்தம்செய்யத் தகுந்தவனல்லன். ஆனால் நான் சொன்ன சொல் தவறமாட்டேன். என் கட்டளைக்கடங்கிய படைகளுடன் நானே உங்களுடன் வந்து அக்கொடிய ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்கிறேன். மேலும் கோடிக்கணக்கான ராக்ஷஸர்கள் வந்தாலும் அவர்களொருவரையும் விடாது அழிக்கிறேன். என் ராமனை அழைத்துச் செல்லவேண்டாம். அவனை விட்டு ஒரு நொடிப்பொழுதும் என்னால் உயிர்தரிக்க முடியாது. முனிவரே! என் பிள்ளையை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டுமென்று தங்கள் திருவுள்ளம் இருந்தால், நால்வகைச் சேனையுடன்கூடிய என்னையும் அழைத்துச் செல்லவேண்டுமென வேண்டுகிறேன் என்றார்.
வியாசன்: முனிவர், மன்னனின் வேண்டுதலுக்கு ஒப்புக்கொண்டாரா? என்ன நடந்தது பாட்டி. கேட்பதற்கு மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.
பாட்டி: விச்வாமித்ர முனிவர் மன்னனின் வேண்டுதலுக்கு சம்மதிக்கவில்லை. மன்னனை நோக்கி “அரசனே! நான் விரும்பியதை நிறைவேற்றுவேன் என்று உறுதிமொழி கொடுத்து, அதை நிறைவேற்ற மறுக்கிறாய். உயர்ந்த குலத்தில் பிறந்து, இவ்வாறு சொன்ன சொல் தவறுவது அழகல்ல. இப்படியே நீ உன்னை நாடி வருபவர்களுக்குப் பொய் சத்தியம் செய்து நன்றாக வாழ்ந்திரு” என்று கோபத்துடன் கூறினார். விச்வாமித்ர முனிவர் கோபம் கொள்ளும்பொழுது, பூமி நடுங்கியது. முனிவரின் கோபத்தால் என்ன நேருமோ என்று தேவர்களும் அஞ்சினர். இதைக்கண்ட வசிஷ்ட முனிவர் தசரதனை நோக்கி “மன்னனே! உயர்ந்த இக்ஷ்வாகு குலத்தில் உதித்த நீ , சொன்ன சொல் தவறக்கூடாது. உம்முடைய குலப் பெருமையே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதும் , தர்மத்தை நிலை நாட்டுவதுமே. விச்வாமித்ர முனிவர் தர்மமே வடிவு கொண்டவர். இம்மூவுலகிலுள்ள பலவகைப்பட்ட வில்வித்தைகளை இவர் நன்கு அறிந்தவர். இவர் அறிந்த அஸ்திரங்களை இதுவரையிலும் எவரும் தெரிந்துகொள்ளவில்லை. இனியும் தெரிந்துகொள்ளப்போவதில்லை. உன் பிள்ளை சிறியவனாக இருக்கிறான் என்று விச்வாமித்ர முனிவருடன் அனுப்ப மறுக்காதே. கவலை வேண்டாம் முனிவர் பார்த்துக்கொள்வார். அவ்வரக்கர்கள் அனைவரையும் விச்வாமித்ர முனிவர் ஒருவரே அழிக்க வல்லவர். ஆயினும் உனது மகனுக்கு நன்மை செய்யும்பொருட்டு உன்னிடம் வந்து இப்படி கேட்கின்றார்”. இவ்வாறு வசிஷ்ட முனிவர் சொன்ன சொற்களைக் கேட்டுத் தசரத மன்னன் மனக்கலக்கம் தீர்ந்து, தெளிந்து ராமனை விச்வாமித்ர முனிவருடன் அனுப்ப மனங்கொண்டான்.
அத்துழாய்: மேலும் சொல்லுங்கள் பாட்டி. நீங்கள் மிகவும் அழகாக இவ்விஷயங்களைச் சொன்னீர்கள். கேட்க ஆவலாக இருக்கிறது.
பாட்டி: அடுத்தடுத்த விஷயங்களை நாளை உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள்.
குழந்தைகள் பாட்டி சொன்ன கதையை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.
பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.
பாட்டி தன் அகத்து எம்பெருமானுக்காக புஷ்பம் கட்டிக்கொண்டிருந்தாள். வாருங்கள் குழந்தைகளே! கை கால்களை அலம்பிக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருப்பணியாரங்களைத் தருகிறேன்.
பராசரன்: சென்ற முறை ராம ஜனனம் பற்றிக் கூறினீர்கள் பாட்டி. மேலும் ராம கதையைக் கேட்க ஆசையாக இருக்கிறது.
பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள். தசரத மன்னன் புத்திரர்கள் அவதரித்ததைக் கொண்டாடும் வகையில் நாடு நகரத்தில் உள்ள அனைவர்க்கும் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினான். பின்பு புத்திரர்களுக்கு ஜாத கர்மம் முதலிய சடங்குகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்தான்.
அத்துழாய்: நாடு முழுவதும் திருவிழா போல் தோற்றமளித்திருக்கும். மக்களனைவரும் கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள். கேட்கும்போதே ஆனந்தமாக இருக்கிறது பாட்டி.
பாட்டி: ஆம் அச்சமயத்தில் தேவர்கள் பூமழை பொழிந்தார்கள், கந்தர்வர்கள் ஆகாயத்தில் மிக இனிமையாக பாடி மகிழ்ந்தனர். மக்கள் அனைவரும் குதூகலித்தனர். அக்குமாரர்கள் நால்வரும் நாளடைவில் வேத சாஸ்திரங்களைக் கற்று, தனுர் வேதத்திலும் வல்லமை பெற்று உலகத்திற்கு நன்மை செய்வதிலே மிக விருப்பங்கொண்டு, நற்குணங்களனைத்திற்கும் இருப்பிடமாகத் திகழ்ந்தனர். நால்வர்களில் ராமபிரான் தன் தந்தை தசரதனுக்குப் பணிவிடை செய்வதிலே மிக விருப்பம்கொண்டான். லக்ஷ்மணன் ராமபிரானுக்குத் தொண்டு செய்வதான பெரும் செல்வத்தை மேன்மேலும் பெருகச் செய்துகொண்டிருந்தான். ஸ்ரீராமனும், லக்ஷ்மணனும் இணைபிரியாமல் இருப்பார்கள். லக்ஷ்மணன் எவ்வாறு ராமனைவிட்டு பிரியாதிருப்பானோ அதுபோல சத்ருகனன் பரதனை விட்டு பிரியாதிருப்பான். பரதனுக்கு சத்ருகனன் தன் உயிரினும் மேலாக இருந்தான்.
வேதவல்லி: நால்வரும் எவ்வாறு உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்தார்களோ அவர்கள் அருளினால் நாங்களும் எங்கள் உடன் பிறந்தவர்ககுடன் ஒற்றுமையாக வாழ்வோம் பாட்டி. மற்ற மூவரும் ஆம் என்றனர்.
வியாசன்: சகோதர ஒற்றுமைக்கு இவர்களே சிறந்த முன் உதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
பாட்டி: ஆமாம். ஸ்ரீராமனுடைய சரித்திரத்தைக் கேட்கக் கேட்க நற்பண்புகள் வளரும். இப்படிப்பட்ட சிறந்த குணங்களைப்பெற்ற புத்திரர்களினால் தசரதன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தான். நீங்களும் உங்கள் பெற்றோர்கள் மனம் மகிழும்படி நடந்துகொள்ளவேண்டும். குழந்தைகள் நால்வரும் நிச்சயமாக நீங்கள் கூறியபடி நடந்துகொள்வோம் பாட்டி என்றனர்.
பாட்டி: நீங்கள் கூறுவதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் சொல்கிறேன் கேளுங்கள். நாட்கள் கடந்தன. புதல்வர்கள் நால்வருக்கும் திருமணம் செய்ய தகுந்த வயது வரக்கண்டு ஆனந்தத்துடன் அவர்களது திருமணம் குறித்து புரோஹிதருடனும், உறவினர்களுடனும் கூடி ஆலோசித்துக் கொண்டிருக்கையில் விசுவாமித்ர முனிவர் தசரத மன்னனைக் காண அவ்விடம் வந்தார். மன்னனும் அம்மாமுனியைக் கண்டு மகிழ்ந்து தன் புரோகிதரான வசிஷ்டமுனிவருடன் கூடி நன்கு வரவேற்று அமரச்செய்தான். விசுவாமித்ர முனியும் களிப்படைந்து மன்னனையும் வசிஷ்ட வாமதேவர் முதலிய ரிஷிகளை நலம் விசாரித்தார். பின்பு மன்னன் விசுவாமித்திர முனிவரைப் பூஜித்து முனிவரே நான் புதல்வர்களின் திருமணம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கையில் தாங்கள் தற்செயலாய் வந்து எனக்கு காட்சியளித்தது எனக்கு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுக்கிறது. நீர் எந்த பயனைக் குறித்து வந்தீரோ அதைச் சொன்னால் உம்முடைய அருளினால் அதை நிறைவேற்ற விரும்புகிறேன். உம்முடைய கட்டளையை நான் நிறைவேற்றுவேனோ மாட்டேனோ என்று சந்தேகப்படவேண்டாம். நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றான்.
வேதவல்லி: விசுவாமித்திர முனிவர் மன்னனிடம் எதைப் பெறுவதற்காக வந்தார் பாட்டி? கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.
பாட்டி: சுவாரசியத்துடன் காத்திருங்கள். நீங்கள் அடுத்தமுறை வரும்பொழுது கூறுகிறேன். இப்பொழுது இருட்டிவிட்டதால் உங்கள் அகத்திற்குப் புறப்படுங்கள்.
குழந்தைகள் நால்வரும் தங்கள் அகத்திற்குப் புறப்பட்டார்கள்.
பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.
பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன். நான் உங்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். அடுத்ததாக குலசேகர ஆழ்வார் அனுபவித்த ராம சரித்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
வியாசன்: குலசேகர ஆழ்வார் ராமபிரானிடத்தில் மிகவும் அன்பு கொண்டவர். அவர் அனுபவித்த ராம சரித்திரத்தைக் கேட்க ஆசையாக இருக்கிறது பாட்டி.
அத்துழாய் : பாட்டி, எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் ராமனாக அவதரிக்கக் காரணம் என்ன ??
பாட்டி: சொல்கிறேன் கேளுங்கள் குழந்தைகளே. தேவர்கள் ஒரு சமயம் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை திருப்பாற்கடலுக்குச் சென்று சேவித்தார்கள். அப்பொழுது அரக்கர்களால் தாங்கள் மிகவும் துன்பப்படுவதாகவும் அவர்கள் கொடுமைகளிலிருந்து காத்தருளும்படி எம்பெருமானை சரணடைந்தார்கள். எம்பெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தான் பூவுலகில் ராமனாக அவதரித்து அரக்கர்களை அழிப்பதாக தேவர்களிடம் கூறினார்.
பராசரன்: அரக்கர்களை அழிப்பதற்காக எம்பெருமான் ராமனாக அவதரித்தார் என்று கூறினீர்கள் பாட்டி. இதை எம்பெருமான் தான் இருக்கும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து செய்திருக்க முடியுமே? பிறகு ஏன் மனிதனாக அவதரித்தார் ?
பாட்டி : நல்ல கேள்வி கேட்டாய் பராசரா. சொல்கிறேன் கேள். எம்பெருமான் தான் நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்துமுடிக்கும் ஆற்றல் படைத்தவன். ஆனால் அவனுடைய அவதாரத்திற்கு காரணம் உண்டு. தன் அடியவர்களுக்கு தீங்கு இழைப்பவர்களை அழிப்பதற்கும், அடியவர்களை காப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் எம்பெருமான் தன் மேன்மையை மறைத்துக்கொண்டு அவதாரம் எடுக்கிறான். நம் போன்ற மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கவே ராமனாக எம்பெருமான் அவதரித்தான்.
அத்துழாய் : எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனே நமக்கு முதல் ஆசார்யன் என்று தாங்கள் கூறியது நினைவிருக்கிறது பாட்டி. அவர் ராமனாக எங்கு , யாருக்குப் பிள்ளையாக அவதரித்தார் ? ராமாவதாரத்தில் எம்பெருமான் நமக்கு கற்றுக்கொடுத்த விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது பாட்டி.
பாட்டி : இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த தசரதன் அயோத்தி நகரத்தை ஆண்டு வந்தான். தசரதன் மிகுந்த வலிமையானவன், தர்ம நெறி தவறாமல் வாழ்ந்தவன் , இனிமையான சொற்களையே பேசுபவன் , பகைவரையெல்லாம் பறந்தோடச் செய்தவன், தன் நாட்டில் நல்லாட்சி புரிந்து தன் நாட்டு மக்களை சுகமாக வாழச்செய்தவன். அவன் தனக்கு நீண்ட காலமாக புத்திரனுண்டாக வேண்டி தவம் செய்து கொண்டிருப்பினும் புத்திரனுண்டாகவில்லை என்று தனக்குள் சிந்தித்துக்கொண்டிருக்கையில் பிள்ளை பிறக்கும் பொருட்டு அச்வமேதயாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது. உடனே தன் மந்திரிகளின் தலைவனான சுமந்திரனைப் பார்த்து நீ என்னுடைய குருக்கள் , புரோஹிதர்கள் யாவரையும் விரைவில் அழைத்து வா என்று கட்டளையிட்டான். அவ்வாறே சுமந்திரனும் விரைவாகச் சென்று ஸூயஜ்ஞா , வாமதேவர், ஜாபாலி , காச்யபர் , தசரத அரசனின் குல குருவாகிய வசிஷ்டர் மற்றுமுள்ள உயர்ந்த அந்தணர்களையும் அரச மாளிகைக்கு அழைத்து வந்தான். தசரதன் அவர்கள் அனைவரையும் பூஜித்து மரியாதைகள் செய்து தனக்கு தோன்றிய எண்ணத்தைக் கூறி அச்வமேதயாகத்தை நீங்கள் தான் இனிதாக நிறைவேற்றியருள வேணும் என்றான். தசரதனுடைய அச்வமேதயாகம் புத்திரகாமேஷ்டி யாகத்துடன் கூட சிறப்பாக நிறைவேறியது. ஓராண்டுகள் சென்றது. யாகத்தின் பலனாக தசரத சக்ரவர்த்தியின் மூன்று மனைவிகளுக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள். கௌஸல்யா தேவிக்கு ராமனும், கைகேயிக்கு பரதனும் , சுமித்திரைக்கு லக்ஷ்மணன், சத்ருக்கனன் என்ற இரு பிள்ளைகளும் பிறந்தார்கள்.
வேதவல்லி: ஆக ராமபிரான் தேவர்களின் துன்பத்தைப் போக்குவதற்காக தசரத மன்னனுக்கு பிள்ளையாக அவதரித்தாரா?
பாட்டி: ஆமாம் வேதவல்லி. எம்பெருமான் தசரதனுக்கு மகனாக அவதரித்து அவன் குலமாகிய இக்ஷ்வாகு குலத்திற்கே பெருமை சேர்த்தான். தேவர்களையும் அரக்கர்களின் கொடுமைகளிலிருந்து காத்தான். இதையே குலசேகர ஆழ்வார், தான் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில், வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுதுமுயக் கொண்ட வீரன் என்று அழகாக குறிப்பிடுகிறார். அதாவது உயர்ந்த சூரிய குலத்திற்கே பெருமை சேர்க்கும் விளக்காக எம்பெருமான் ஸ்ரீராமனாக அவதரித்து, தேவர்கள் எல்லோருடைய துன்பத்தையும் போக்கினான் என்பது பொருள். மேலும், கடும் தவம் புரியும் ரிஷி முனிகளாலும் காண்பதற்கு அறிய எம்பெருமான், தன் மேன்மையை மறைத்துக்கொண்டு மனிதனாக அவதரித்து, நம் போன்ற மனிதர்கள் எவ்வாறு நன்னெறியுடன் வாழ வேண்டும் என்பதைத் தன் ராமாவதாரத்தில் வெளிப்படுத்தினான். எண்ணிலடங்காத திருக்கல்யாண குணங்களைக் கொண்டவன் ராமபிரான். தாய் , தந்தை , குரு மற்றும் பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொள்வது , உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று பிரித்துப் பார்க்காது நட்புடன் பழகுவது, எப்பொழுதும் கனிவுடன் பேசுவது , எடுத்த செயலை முடித்தே ஆகவேண்டும் என்ற உறுதி , அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பது , எந்த சூழ்நிலையிலும் உண்மையை மட்டுமே பேசுவது , தன்னை சரணடைந்தவர்களைக் காப்பது என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ராமபிரானைப் பற்றி நாம் கற்பதே உயர்ந்த ஞானத்தைக் கொடுக்கும். இதையே நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ? என்கிறார். அதாவது கற்க விரும்புபவர்கள் (உயர்ந்த ஞானத்தைப் பெற விரும்புபவர்கள்) தசரத சக்கரவர்த்தித் திருமகன் ராமபிரானின் பண்பையும் பெருந்தன்மையையும் விட்டு வேறொன்றைக் கற்க நினைப்பார்களா? மாட்டார்கள் என்கிறார். அவன் வாழ்ந்து காட்டிய வழியில் நாமும் வாழ முயற்சித்தாலே, நம் வாழ்க்கை செம்மையாகும்.
குழந்தைகள் நால்வரும் ராமபிரானுடைய திருக்கல்யாண குணங்களைப் பாட்டி சொல்லக்கேட்டு இத்தனை நற்குணங்களும் ஒருவருக்கே அமையப் பெறுவது என்பது மிக அறிது. ராமனைப் பற்றிக் கேட்கும் பொழுதே துளியேனும் அவருடைய நல்ல குணங்களை நாங்களும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது பாட்டி.
பாட்டி : மிக்க மகிழ்ச்சி. சிறுவயதிலிருந்தே நற்பண்புகளை வளர்த்துக்கொள்வது மிக அவசியம். ராமபிரானுடைய இன்னருளால் உங்களுக்கு இந்த எண்ணம் தோன்றியுள்ளது. நிச்சயம் நீங்கள் நற்பண்புள்ளவர்களாக இருப்பீர்கள்.
குழந்தைகளும் பாட்டி கூறிய ராம சரித்ரத்தை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.
நம் பாரத தேசத்தில் பலகாலமாக அனுபவிக்கப்பட்டு வரும் இதிஹாஸங்கள் ஸ்ரீராமாயணமும் மஹாபாரதமும். இவ்விரண்டில் ஸ்ரீராமாயணம் நம்முடைய ஆசார்யர்களால் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளது,. ஸ்ரீராமபிரானின் சரித்ரத்தை மிக அழகாக நமக்குக் காட்டும் பொக்கிஷம் இது. மேலும் சீதாப்பிராட்டியின் பெருமை ஸ்ரீலக்ஷமணன், ஸ்ரீபரதாழ்வான், ஸ்ரீசத்ருக்னாழ்வான், ஸ்ரீஹனுமான், ஸ்ரீகுஹப்பெருமாள், ஸ்ரீவிபீஷணாழ்வான் மற்றும் பலரின் பெருமையைக் காட்டக்கூடிய அற்புதக் காவியம் இது.
நம் குழந்தைகள் சிறு வயதிலேயே ஸ்ரீராமாயணத்தை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குலசேகராழ்வார் ஸ்ரீராம சரித்ரத்தைத் தன்னுடைய பெருமாள் திருமொழியின் கடைசிப் பதிகத்தில் மிக அழகாக வெளியிட்டுள்ளார். இதைக் கொண்டு நாமும் இங்கே ஸ்ரீராமாயணத்தை அனுபவிப்போம். ஆண்டாள் பாட்டி இதை அழகிய கதைகளாகச் சொல்ல, குழந்தைகள் கேட்டு மகிழும் விதத்தில் இந்தத் தொடர அமைக்கப்படுகிறது.
സനാതന ധർമ്മമെന്ന ശ്രീവൈഷ്ണവം ഒരു പുരാതന മതമാണു്. പല മഹാജ്ഞാനികളും പ്രചരിപ്പിച്ചിട്ടള്ളതാണ് ഇത്. ദ്വാപര യുഗാന്തത്തില് ഭാരത ദേശത്തിന്റെ തെക്കുള്ള പുണ്യനദീതീരങ്ങളിൽ ആഴ്വാന്മാർ അവതരിച്ചു തുടങ്ങി. കലിയുഗ തുടക്കത്തോടേ ആഴ്വാര്മാരുടെ അവതാരങ്ങള് അവസാനിച്ചു. ഇതൊക്കെയും, ശ്രീമന്നാരായണ ഭക്തന്മാർ ദക്ഷിണഭാരത നദി തീരങ്ങളിൽ അവതരിക്കുമെന്നും, ഭഗവാനെക്കുറിച്ചുള്ള സത്യജ്ഞാനത്തേ ഏവർക്കും ബോധിപ്പിക്കുമെന്നും ശ്രീമദ്ഭാഗവതത്തിൽ വ്യാസ മഹർഷി നേരത്തേ പറഞ്ഞതിന് പ്രകാരമാണു്.
ഭഗവാനെ ധ്യാനിച്ചു അതിൽ ആഴ്ന്നു പോയതുകൊണ്ടാണ് ആഴ്വാന്മാർ എന്ന് അറിയപ്പെടുന്നത്. ഇവര് പത്തു പേരാണു് – പൊയ്കൈയാഴ്വാർ, ഭൂതത്താഴ്വാർ, പേയാഴ്വാർ, തിരുമഴിസൈയാഴ്വാർ, നമ്മാഴ്വാർ, കുലശേഖരാഴ്വാർ, പെരിയാഴ്വാർ, തൊണ്ടരടിപ്പൊടിയാഴ്വാർ, തിരുപ്പാണാഴ്വാർ, തിരുമങ്കൈയാഴ്വാർ എന്നിവർ. ആചാര്യ നിഷ്ഠനായ മധുരകവിയാഴ്വാരെയും, ഭൂദേവിയുടെ അവതാരമായ ആണ്ടാളെയും കൂട്ടിച്ചേർത്തു പന്ത്രണ്ടു പേരെന്നും പറയാം.
ആണ്ടാളെ ഒഴികെ മറ്റെല്ലാ ആഴ്വാന്മാരെയും ഭഗവാന്(എംബെരുമാൻ എന്ന് തമിഴ്) സംസാരത്തിൽനിന്നും തിരഞ്ഞെടുത്തു,ലൌകികമായ മയക്കം(മോഹം) മാറാൻ ഇവർക്ക് ദിവ്യജ്ഞാനം അരുളി. ആഴ്വാന്മാർ സ്വന്തം ഭഗവദനുഭവത്തെ അരുളിച്ചെയൽ എന്ന പേരില് പ്രശസ്തമായ നാലായിരം ദിവ്യപ്രബന്ധമായി പാടി വെളിപ്പെടുത്തി.
ആഴ്വാന്മാരുടെ കാലം കഴിഞ്ഞ് പിന്നീടു് ആചാര്യന്മാർ അവതരിച്ചു.
ആചാര്യന്മാർ, അരുളിച്ചെയൽകളുടെ ഉൾപ്പൊരുളിനെ വെളിപ്പെടുത്തുവാനായി അനേകം വ്യാഖ്യാനങ്ങൾ രചിച്ചിട്ടുണ്ടു്. നമ്മൾ പഠിച്ചു ആസ്വദിക്കാനായി ആചാര്യന്മാർ സൂക്ഷിച്ചു വച്ചിട്ടുള്ള ഈടുവെപ്പെന്നത് ഈ വ്യാഖ്യാനങ്ങൾ തന്നെയാണു്. ആഴ്വാന്മാരുടെ അനുഗ്രഹം കിട്ടിയ ആചാര്യന്മാർ, നാലായിര ദിവ്യപ്രബന്ധ പാസുരങ്ങളുടെ അർത്ഥങ്ങളെ പല തരത്തിലും തലങ്ങളിലുമായി വളരെ സൂക്ഷ്മമായാണ് വിശദീകരിച്ചീട്ടുള്ളത്.
എംബെരുമാൻടെ അന്തര്യാമിത്വത്തിൽ (ഹൃദയകമലവാസൻ) ആഴ്ന്നിരുന്നവർ. കൂടാതെ, ശ്രീമന്നാരായണന്റെ മാത്രം ദാസനാവണം എന്നും, അന്യ ദൈവങ്ങളെ കൈക്കൊള്ളരുതു് എന്നും ബോധിപ്പിച്ചു
ആടൽമാ എന്ന കുതിരയിലേറി ഒരുപാടു ദിവ്യ ദേശങ്ങളില് ചെന്നു് അവിടെയെല്ലാം എംബെരുമാൻമാരെ തൊഴുതു മംഗള ആശംസകൾ പാടിയവരാണു്. ശ്രീരംഗത്തും പലവിധ കൈങ്കര്യങ്ങള്(സേവനങ്ങള്)അനുഷ്ഠിച്ചു.
ഗുകാര: അന്ധകാര വാച്യ ശബ്ദ: – ഗു എന്ന അക്ഷരം ജ്ഞാനത്തേ ചൂഴ്ന്നിട്ടുള്ള ഇരുളിനെ സൂചിപ്പിക്കുന്നു. രുകാര: തന്നിവർത്തക: – രു എന്ന അക്ഷരം ഇരുളിന്റെ നിവർത്തിയെക്കുറിക്കുന്നു. ആകയാല്, ഗുരു എന്ന പദം, ഇരുൾനീക്കി സത്യജ്ഞാനത്തെ ബോധിച്ചു സൻമാർഗ്ഗത്തിലാക്കുന്നവരെന്ന് അര്ത്ഥമാക്കുന്നു. ഗുരു അഥവാ ആചാര്യന് എന്നീ രണ്ടു പദങ്ങളും ആത്മോപദേഷ്ടാക്കളെ ഉദ്ദേശിച്ചുള്ളതാണ്.
ഗുരു പിന്നെ, ശിഷ്യൻ എന്നു തുടർച്ചയായി ഗുരുപരമ്പരയിലൂടെ ശാസ്ത്ര താല്പര്യയങ്ങളെ സംരക്ഷിച്ച് തുടര്ന്ന് വരുന്ന രീതിയാണ് ഓരാൺവഴി ഗുരുപരമ്പര എന്നത്. ശ്രീലക്ഷ്മീനാഥനായ ശ്രീരംഗനാഥൻ തുടങ്ങി, ലോക ഗുരുവായ ശ്രീരാമാനുജർ എന്ന ജഗദാചാര്യൻ വഴി, സ്വയം ശ്രീരംഗനാഥൻ പോലും പ്രത്യക്ഷപ്പെട്ട് തന്റെ സ്വന്തം ആചാര്യനെന്നു വിളിച്ച് ആദരിച്ച മണവാളമാമുനികൾ വരെ നീണ്ടതാണു് നമ്മുടെ ഓരാൺവഴി ഗുരുപരമ്പര. ഈ ഓരാൺവഴി ആചാര്യന്മാരെ അറിയാം.
13. പെരിയ പെരുമാൾ
ശ്രീമന്നാരായണൻ
മീനം – രേവതി
ഭഗവദ്ഗീത, “ശ്രീശൈലേശ ദയാപാത്രം” എന്നു തുടങ്ങുന്ന മണവാളമാമുനികളുടെ ധ്യാനശ്ലോകം(തനിയൻ) ഇവ നല്കി.
ശ്രീരംഗനാഥൻ എന്നു പ്രസിദ്ധനായ ആദിഗുരു. പരമപദത്തിൽ നിന്നും സത്യലോകത്തിലേക്കു് എഴുന്നരുളി, ബ്രഹ്മാവു ആരാധന ചെയ്തുകൊണ്ടിരുന്നു. പിന്നീടു അയോദ്ധയിലേക്കിറങ്ങി വന്നു, ശ്രീരാമൻ ഉൾപ്പെട്ട സൂര്യവംശ രാജാക്കളുടെ ആരാധനയിലായിരുന്നു. അതിനു ശേഷം വിഭീഷണന്റെ കൂടെ വന്ന് ശ്രീരംഗത്തിലെത്തി.
ശ്രീരംഗനായകി എന്നു് ഏവരും വിളിക്കുന്ന ലോകജനനിയായ ശ്രീലക്ഷ്മി. സ്വയം ഭഗവാന്റെ ദിവ്യമഹിഷി. ഭഗവാന്റെ സാക്ഷാൽ കാരുണ്യം സ്വരൂപമായവൾ. എംബെരുമാനോട് അടുക്കാൻ സഹായിക്കുന്ന ശുപാർശകാരിയായി (പുരുഷകാരകയായി) പൂർവാചാര്യൻമാർ കീർത്തിക്കുന്ന അമ്മ.
പരമപദത്തിൽ ഭഗവാന്റെ സേനാ നായകൻ. ഭഗവാന്റെ പ്രതിനിധിയായ കാര്യനിര്വാഹകൻ. നിത്യവും ഭഗവാൻ ഭുജിച്ച പ്രസാദത്തിനു ആദ്യ അവകാശിയായതു കൊണ്ടു് ശേഷാശനർ എന്ന തിരുനാമം കൂടിയുണ്ടു്.
ഗീതാർത്ഥ സങ്ഗ്രഹം, ആഗമ പ്രാമാണ്യം, ചതുശ്ലോകീ, സ്തോത്ര രത്നം മുതലായവ
ഭക്തിയെന്നാൽ എന്തെന്നു് സ്തോത്ര രത്നത്തിൽ തെളിച്ചുപറഞ്ഞു, ഭാഗവതന്മാരായ എല്ലാവരെയും വേര്തിരിവില്ലാതെ, സമഭാവനയോടെ കണ്ടു. എല്ലാവരെയും സമഭാവത്തില് കാണണമെന്ന് നമ്മെ പഠിപ്പിച്ചു.. ശ്രീരാമാനുജരെ കണ്ടെത്തി അദ്ദേഹത്തിന് വേണ്ട അറിവ് പകരാനായി ആറു ശിഷ്യരെ തെരഞ്ഞെടുത്ത് എല്ലാം പറഞ്ഞു പഠിപ്പിച്ചു, സര്വ്വവും ചിട്ടപ്പെടുത്തി വെച്ചു.
തിരുവായ്മൊഴി 9000പ്പടി വ്യാഖ്യാനവും മറ്റു് ചില വ്യാഖ്യാനങ്ങളും.
ഭട്ടർ തിരുത്തിയെടുത്തവരാണു. അദ്വൈത വിദ്വാനായിരുന്ന ഇദ്ദേഹം ഭട്ടരുടെ ശ്രമത്താല് ഉയർന്നൊരു ശ്രീവൈഷ്ണവരായി മാറി. ഭട്ടരുടെ ശിഷ്യന്മാരിൽ ഏറ്റവും തിളക്കം കൂടിയവരായിരുന്നു. വേദാന്താചാര്യർ എന്നും അറിയപ്പെടുന്നു.
തിരുവായ്മൊഴി 36000പ്പടി വ്യാഖ്യാനവും വേറെ ചില വ്യാഖ്യാനങ്ങളും.
സംസ്കൃത ദ്രാവിഡ ശാസ്ത്രങ്ങളിൽ മികച്ച നിപുണൻ. ആദ്യമായി ശിരീരംഗം ക്ഷേത്രത്തിൽത്തന്നേ തിരുവായ്മൊഴിയെ വിശദമായി ഉപന്യസിച്ചു(പ്രഭാഷണ പരമ്പരകള് നടത്തുന്നതിനെ ആണ് ഉപന്യാസം എന്ന് പറയുന്നത്). തിരുമങ്കയാഴ്വാരുടെ അവതാരമായി കരുതുന്നു.
വേദാന്ത വേദ്യ അമൃത വാരിരാശേ:വേദാർത്ഥ സാര അമൃത പൂരമഗ്ര്യം |
ആദായ വര്ഷന്തം അഹം പ്രപദ്യേകാരുണ്യ പൂർണം കലിവൈരിദാസം ||
നമ്പിള്ളയുടെ പ്രിയപ്പെട്ട ശിഷ്യൻ. നമ്പിള്ളൈയുടെ ഊടു എന്ന തിരുവായ്മൊഴി പ്രഭാഷണങ്ങളെ ഓലച്ചുവടികളിൽ എഴുതിയെടുത്തു. പിള്ളൈ ലോകാചാര്യർ, അഴകിയ മണവാളപ്പെരുമാൾ നായനാർ എന്ന രണ്ടു പുത്ര രത്നങ്ങളെ ശ്രീവൈഷ്ണവ സമ്പ്രദായത്തിനായിക്കൊടുത്തു.
ശ്രീ കൃഷ്ണ പാദ പാദാബ്ജേ നമാമി ശിരസാ സദാ|യത് പ്രസാദ പ്രഭാവേന സർവ സിദ്ധിരഭൂന്മമ||